வெங்காயம் திருட்டு: சிசிடிவி வைத்து கண்காணிக்கும் குஜராத் வியாபாரிகள்
அகமதாபாத்: தங்கம் போல உயர்ந்து வரும் வெங்காயத்தை சிசிடிவி கேமரா வைத்து பாதுகாக்கின்றனர் வியாபாரிகள்.
வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லி, காஷ்மீரில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. வெங்காயத்துக்கு நாடெங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்பனையாகிறது. இதனால் காய்கறி கடைகளில் வெங்காயம் திருடப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
குஜராத் மாநிலத்தில் மதுவா நகரில் உள்ள மார்க்கெட்தான் வெங்காயம் விற்பனைக்கான பெரிய மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் மட்டும் தினமும் சுமார் 25 கிலோ வெங்காயம் திருட்டு போய் விடுவதாக தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் மதுவா மார்க்கெட்டில் புகுந்த மர்ம மனிதர்கள் 2 மூட்டை வெங்காயத்தை எடுத்து சென்று விட்டனர். இதையடுத்து அந்த மார்க்கெட் முழுவதும் ரகசிய காமிராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இரவு-பகலாக கண்காணிக்கும் இந்த காமிராக்கள் மூலம் வெங்காயம் திருட்டை தடுக்க முடியும் என்று காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர வெங்காயம் இருப்பு வைக்கப்படும் குடோன்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications