காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவ அதிகாரி மரணம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீ நகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
உரி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகள் கொண்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சண்டையின் போது, இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு ராணுவ வீரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்வதால், எல்லையில் கடும் பதற்றம் நிலவுவதாக எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications