காவிரி மேலாண்மை வாரியம்: பிடிவாத கர்நாடகா மீது சுப்ரீம் கோர்ட்டில் புகார்… மத்திய அரசு முடிவு!
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உறுப்பினர் பெயரை அளிக்காத கர்நாடக மாநில அரசின் மீது மத்திய அரசு இன்று புகார் செய்ய உள்ளது.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அக். 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட வேண்டும் என்றும் 1ம் தேதிக்குள் உறுப்பினர் பெயர்களை அனுப்பி விட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதுதவிர 1ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை தினமும் 6000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடவில்லை. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அதற்கான உறுப்பினர் பெயரையும் இன்னும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. ஆக, சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதுவும் கர்நாடகத்திற்கு அவசியமில்லை என்றாகிவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் மேலாண்மை வாரியத்திற்கான உறுப்பினர் பெயர்களை தெரிவித்துவிட்ட நிலையில், கர்நாடக அரசு மட்டும் இன்னும் பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால் நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இன்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு இன்னும் உறுப்பினர் பெயரை தெரிவிக்க வில்லை என்ற புகாரை அளிக்க உள்ளார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications