Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும் - மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட சம்பளத்துடன் நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

7-வது ஊதியக் குழு பரிந்துரையைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது.

central-govt-employees-get-arrears-one-instalment

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இதன்மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது.

இதன்படி மத்தி அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். இதர படிகள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போதைய விகிதாச்சாரப்படியே இதர படிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும். ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை ஒரே தவணையாக தரப்படும். ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+