For Daily Alerts
Just In
வீரதீர செயல்கள் புரிந்த 112 ராணுவ வீரர்களுக்கு விருதுகள்... மத்திய அரசு அறிவிப்பு!
வீரதீர செயல்கள் புரிந்த 112 ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
டெல்லி: வீரதீர செயல்கள் புரிந்த 112 ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
ராணுவத்தில் வீரதீர செயல்களை செய்யும் வீரர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கீர்த்தி சக்ரா விருதுகளையும் சவுரிய சக்ரா விருதுகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் நாட்டின் 71வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு வீர தீர செயல் புரிந்த 112 ராணுவ வீரர்களுக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் 5பேருக்கு கீர்த்தி சக்கரா விருதுகளும், 17 பேருக்கு சவுரிய சக்ரா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விமானப்படையைச் சேர்ந்த 2 வீரர்களுக்கு வாயு சேனா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வீரர்களுக்கு நவசேனா பதக்கங்களும் 85 பேருக்கு சேனா பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
Comments
English summary
Central govt has announced the awards for 112 military persons. keerthi chakra, sena awards have announced by the government for the independence day.
Story first published: Monday, August 14, 2017, 22:20 [IST]