விளாசிய சுப்ரீம்கோர்ட்.. சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் முடிவை கைவிட்டது மத்திய அரசு!
சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் முடிவை கைவிடுவதாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் முடிவை கைவிடுவதாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்க மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடிவு செய்தது.
இதனை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மஹுவா மொய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த 13-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு இந்திய மக்களின் வாட்ஸ்-அப் செய்திகளை டேப் செய்ய விரும்புகிறது.

சுப்ரீம் கோர்ட் விமர்சனம்
இது கண்காணிக்கும் அரசை உருவாக்குவது போன்றது. ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துவது போன்றது என கடுமையாக விமர்சனம் செய்தது.

2 வாரங்களில் பதில்
மேலும் இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபாலின் வழிகாட்டலையும் கேட்டது.

விசாரணைக்கு எடுக்கப்படும்
இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு டெண்டர் கோருவதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கைவிட்டது மத்திய அரசு
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களை கண்காணிக்க மாவட்டந்தோறும் இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
-
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
கழுதை மேய்த்தால் ரூ.50 லட்சம்.. மத்திய அரசு தரும் மானியம்.. ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் -
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! மத்திய அரசு மெகா முடிவு? சென்னை டூ அமெரிக்கா டிக்கெட் விலை குறையுமா -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!












Click it and Unblock the Notifications