"கே..." சட்டவிரோதம்- தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு மனு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஓரின சேர்க்கை சட்டவிரோதம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
ஓரின சேர்க்கை சட்டப்பூர்வமானது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ இதை நிராகரித்து சட்டவிரோதமானது என்று அதிரடி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications