ஒரு மாநில தேர்தலுக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை நசுக்கும் மத்திய அரசு!
ஒரு மாநில தேர்தலுக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயல் ஏற்கத்தக்கதல்ல.
Recommended Video

டெல்லி: தமிழக, புதுவை மக்களை துச்சமாக எண்ணி ஒரு மாநிலத்தின் தேர்தல் பிரசாரத்துக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தையே நசுக்குவது மாற்றான்தாய் மனப்பான்மை அல்லாமல் வேறு என்ன?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் எத்தனை கால அவகாசம் அளித்தாலும் மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது மத்திய அரசு. இன்றும் காவிரி வரைவு அறிக்கைக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் ஒப்புதல் அளிக்கவில்லை என்று காலஅவகாசம் கோரியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் 8 வார கால அவகாசம் அளித்த நிலையில் மீண்டும் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தையே அவமதித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் இல்லாவிட்டால் அவர் வரும் வரை உச்சநீதிமன்றமாகவே இருந்தாலும் காத்திருக்கத்தான் வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டதாகவே கருதப்படுகிறது.
காவிரி வாரியம் என்பது தமிழக, புதுவை மக்களுக்கு வாழ்வாதார பிரச்சினையாகும். இதை கூட புரிந்து கொள்ளாமல் காவிரியை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக கர்நாடக தேர்தலில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதை போல் தமிழக, புதுவை மக்களை துச்சமாக கருதி ஒரு மாநில பிரசாரத்துக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை தூக்கிப் போட்டு மிதிப்போம் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது மத்திய அரசு.












Click it and Unblock the Notifications