Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகை மிரட்டும் ஜிக்கா... இந்தியாவில் நுழையாமல் தடுக்க மத்திய அரசு தீவிரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிக்கா வைரஸ் இதுவரை இந்தியாவில் பரவவில்லை. எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை. அதேசமயம், ஜிக்கா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்குச் செல்லும்போது கவனமுடன் இருக்குமாறு மத்திய அரசு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கொசு மூலம் பரவும் ஜிக்கா வைரஸ் மிகப் பெரிய அளவில் உலக நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து உலக நாடுகள் தற்காப்பு நடவடிக்கைகளில் குதித்துள்ளன.

மத்திய அரசும் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்ககைள் தேவை என்பது குறித்த ஆலோசனைகளில் இறங்கியுள்ளது. மக்களுக்கும் அது பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அறிவுறுத்தல்களையும் அது பட்டியலிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பட்டியல்...

விளம்பர போர்டு...

விளம்பர போர்டு...

அனைத்து சர்வதேச, உள்ளூர் விமான நிலையங்களிலும் ஜிக்கா வைரஸ் பாதிப்பு குறித்த சைன் விளம்பர போர்டு வைக்கப்படும்.

சிகிச்சை...

சிகிச்சை...

வெளிநாடு சென்று திரும்பும் பயணிகள், இந்த பாதிப்பு தங்களுக்கு பரவியிலிருந்தால் விமான நிலையத்திலேயே அதுகுறித்து உள்ள மையத்தில் சொல்லி நிவாரணம் பெற வேண்டும்.

கருவில் உள்ள சிசுக்கள்...

கருவில் உள்ள சிசுக்கள்...

அமெரிக்க நாடுகளில்தான் ஜிக்கா வைரஸ் தற்போது அதி வேகமாகப் பரவி வருகிறது. இதனால் கருவில் உள்ள சிசுக்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கின்றன.

ஏடிஎஸ் கொசு...

ஏடிஎஸ் கொசு...

இந்தியாவில் இதுவரை பரவவில்லை. ஏடிஸ் எகிப்தி என்ற கொசு மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. இதுவே டெங்கு நோய் பரவலுக்கும் காரணமான கொசு ஆகும்.

கண்காணிப்புக் குழு...

கண்காணிப்புக் குழு...

சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் ஜெனரல் தலைமையிலும், இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலின் கூட்டில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம்...

தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம்...

மேலும் டெல்லியில் உள்ள தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையமானது, நாடு முழுவதுக்குமான ஒருங்கிணைந்த இணைப்பு மையமாக செயல்படும்.

பாதுகாப்பு தேவை...

பாதுகாப்பு தேவை...

பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்வதை முடிந்தவரை மக்கள் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்று திரும்பவேண்டும்.

எச்சரிக்கை தேவை...

எச்சரிக்கை தேவை...

கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்பமாக முயற்சித்து வரும் பெண்கள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்லாமல் தவிர்ப்பதே நல்லது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+