என்.டி.ஆருக்கும் ஒரு பாரத ரத்னா 'பார்சேல்'... சந்திரபாபு நாயுடு குரல்!
ஹைதராபாத்: மறைந்த ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ராமாராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவரது மருமகனும், தெலுங்கு தேச தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது பாரத ரத்னா விருதுக் காலம்.. சச்சினுக்குக் கொடுத்தைத் தொடர்ந்து பலரும் தங்களது அபிமானத் தலைவர்களுக்கு விருதுகளைக் கோர ஆரம்பித்துள்ளனர்.
வாஜ்பாய்க்குத் தர வேண்டும் என்று பாஜக கச்சைக் கட்டிக் கிளம்பியுள்ளது. இந்த வரிசையில் என்.டி.ஆருக்குத் தர வேண்டும் என்று தெலுங்கு தேசம் கிளம்பியுள்ளது.
தெலுங்கு தேசம் தலைவரும், முன்னாள் முதல்வரும், என்டிஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு இதுகுறித்துக் கூறுகையில், இந்தியத் திரைத்துறைக்கும், அரசியலுக்கும் என்.டி.ஆர். ஆற்றிய பங்களிப்பை யாரும் புறக்கணித்து விட முடியாது.
எனவே என்.டி.ஆரைக் கெளரவி்க்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.