ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைகோ... சந்திரபாபு நாயுடு கடும் விமர்சனம்
அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சைகோ போல் செயல்படுவதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். ஆந்திரா முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு புதிய திட்டங்களை அந்த மாநில மக்களுக்காக அறிவித்து வருகிறார். குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெகன் காட்டும் அக்கறை அவரை இளைஞர்களிடையே பெருமளவில் கொண்டு சேர்த்துள்ளது.

அதேநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் கண்களில் ஜெகன் விரலை விட்டு ஆட்டுகிறார் என்றே சொல்லலாம். அந்தளவு கடும் கெடுபிடிகளை காட்டுகிறார். சந்திரபாபு நாயுடு குடியிருப்பை இடித்து தள்ளியது, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைத்தது, விமானநிலையத்தில் நிற்க வைத்து சோதனையிட வைத்தது எனக் கூறிக்கொண்டே போகலாம்.
இதனால் ஆந்திர அரசியலில் எப்போதும் பரபரப்பு நிலவிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, தாம் பல முதல்வர்களை பார்த்துள்ளதாகவும், ஜெகன் மோகன் ரெட்டியை போல் ஒரு மோசமான நபரை தனது வயதிற்கும் பார்த்ததில்லை எனவும் வேதனை தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகளை தொடுத்து ஒடுக்க நினைக்கிறார் ஜெகன் எனக் குற்றஞ்சாட்டினார்.
மொத்தத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சைகோவை போல் செயல்படுகிறார் என்றும், ஜெகன் தனது பழிவாங்கும் போக்கை மாற்றிக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய ஆட்சி நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஜெகன் இப்படியே செயல்பட்டார் என்றால் அவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications