ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைகோ... சந்திரபாபு நாயுடு கடும் விமர்சனம்
அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சைகோ போல் செயல்படுவதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். ஆந்திரா முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு புதிய திட்டங்களை அந்த மாநில மக்களுக்காக அறிவித்து வருகிறார். குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெகன் காட்டும் அக்கறை அவரை இளைஞர்களிடையே பெருமளவில் கொண்டு சேர்த்துள்ளது.

அதேநேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் கண்களில் ஜெகன் விரலை விட்டு ஆட்டுகிறார் என்றே சொல்லலாம். அந்தளவு கடும் கெடுபிடிகளை காட்டுகிறார். சந்திரபாபு நாயுடு குடியிருப்பை இடித்து தள்ளியது, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைத்தது, விமானநிலையத்தில் நிற்க வைத்து சோதனையிட வைத்தது எனக் கூறிக்கொண்டே போகலாம்.
இதனால் ஆந்திர அரசியலில் எப்போதும் பரபரப்பு நிலவிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, தாம் பல முதல்வர்களை பார்த்துள்ளதாகவும், ஜெகன் மோகன் ரெட்டியை போல் ஒரு மோசமான நபரை தனது வயதிற்கும் பார்த்ததில்லை எனவும் வேதனை தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகளை தொடுத்து ஒடுக்க நினைக்கிறார் ஜெகன் எனக் குற்றஞ்சாட்டினார்.
மொத்தத்தில் ஜெகன் மோகன் ரெட்டி சைகோவை போல் செயல்படுகிறார் என்றும், ஜெகன் தனது பழிவாங்கும் போக்கை மாற்றிக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்ய ஆட்சி நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஜெகன் இப்படியே செயல்பட்டார் என்றால் அவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications