ராஜமவுலிகாரு... இப்படி ஒரு மாஸ்டர்பீஸ் தந்ததற்கு வாழ்த்துகள்!- சந்திரபாபு நாயுடு
பாகுபலி என்ற திரைக்காவியத்தைத் தந்ததற்காக வாழ்த்துகள் என இயக்குநர் ராஜமவுலிக்கு ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு.
பாகுபலியின் வரலாறு காணாத வெற்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. பல மொழி சினிமா கலைஞர்கள் அந்தப் படத்தைப் பார்த்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பாகுபலி படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ராஜமவுலியை வாழ்த்தியுள்ளார்.
ட்விட்டரில் அவர், "பாகுபலி என்ற திரைக்காவியத்தைத் தந்த இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள், வாழ்த்துகள். தெலுங்கு சினிமாவின் வலிமை, பெருமையை உலகுக்கு பறைசாற்றிவிட்டார் ராஜமவுலி," என்று பாராட்டியுள்ளார்.
இந்தப் படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகின் பல பாகங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.