கரம் கொடுத்த தெர்மல் இமேஜ்.. அசத்திய ஆர்பிட்டர்.. விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்!
சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர், தெர்மல் இமேஜிங் முறையை வைத்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர், தெர்மல் இமேஜிங் முறையை வைத்து ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் என்று நினைத்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிச்சமாகி உள்ளது. ஆம், சந்திராயன் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் திட்டமிட்டபடி இறங்கவில்லை.
மாறாக நிலவிற்கு மிக அருகில் 2.1 கிமீ தூரம் வரை விக்ரம் லேண்டர் சென்றது. அதன்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தெரியாமல் இஸ்ரோ குழம்பி வந்தது.

என்ன செய்தார்கள்
அதே சமயம் லேண்டருடன் தொடர்பை இழந்தாலும் ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில்தான் இருக்கிறது. இந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை ஆராயும். இந்த ஆர்பிட்டர் மூலம் விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இஸ்ரோ தீவிரமாக முயன்று வருகிறது. ஆர்பிட்டர் நிலவின் தென் பகுதியைத்தான் சுற்றி வருகிறது.

திட்டம்
இந்த ஆர்பிட்டரை வைத்து சந்திரயானை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதன்படியே இன்று காலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆம் நிலவிற்கு மேல் சுற்றும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் இந்த விக்ரமை மேலே இருந்து படம் பிடித்து, கண்டுபிடித்துள்ளது.

எப்படி நடந்தது
இதற்காக தெர்மல் இமேஜ் கேமராவை பயன்படுத்தி உள்ளனர். ஆர்பிட்டரில் தெர்மல் இமேஜிங் கேமராக்கள் இருக்கிறது. இது இருள், அதிக வெளிச்சம் என அனைத்து சூழ்நிலையிலும் படம் பிடிக்க கூடியவை. உலகில் இருக்கும் எல்லா பொருட்களும் குறிப்பிட்ட அளவு ஒளியை வெளியே விடும். அந்த ஒளியின் மூலம்தான் நாம் அதை பார்க்கக் முடிகிறது. இந்த தெர்மல் இமேஜிங் கேமராக்கள் அந்த ஒளியை படம் பிடிக்கும்.

என்ன மாறுபாடு
நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் இருந்து வித்தியாசமான ஒளி வெளியே வரும். இந்த வித்தியாசமான ஒளிகளை மொத்தமாக சேர்த்து இணைத்து பின் ஒரு இமேஜ் உருவாக்கப்படும். அது உண்மையான பொருளின் வடிவத்தை 99% ஒட்டி இருக்கும். இந்த முறையை வைத்துதான் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

என்ன உதாரணம்
உதாரணமாக தீவிரவாத அமைப்புகளை தாக்கும் முன் அந்த குறிப்பிட்ட இடத்தில் எத்தனை தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை ராணுவ வீரர்கள் தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மூலம் கண்டுபிடிப்பார்கள். சாட்டிலைட் அல்லது டிரோன் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்படும்.

அதே முறை
தற்போது அதே முறையை பயன்படுத்தி தெர்மல் இமேஜிங் கேமராக்களை வைத்து சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த இமேஜ் விரைவில் வெளியிடப்படும். அதன்பின் விக்ரம் லேண்டரின் உண்மையான நிலை வெளியே தெரிய வரும்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications