ஹரியானா அரசு மீது வதேராவின் 'நில கொள்ளை'யை அம்பலப்படுத்திய கெம்கா புகார்
Subscribe to Oneindia Tamil
குர்கான்: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில கொள்ளையை அம்பலப்படுத்தியதற்காக தம்மை ஹரியானா அரசு பழிவாங்குகிறது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலத்தை வலுக்கட்டாயமாக வாங்கி அதிக விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு ராபர்ட் வதேரா விற்பனை செய்த விவகாரத்தை வெளிப்படுத்தியவர் கெம்கா. இதனால் அவரை விதை அபிவிருத்தி கார்ப்பரேஷன் துறைக்கு அம்மாநில அரசு மாற்றியது.
தற்போது அந்த துறையில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி கெம்கா மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா மாநில தலைமை செயலருக்கு கெம்கா அனுப்பியுள்ள கடிதத்தில், ராபர்ட் வதேராவின் நில மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால், என்னை அரசியல் ரீதியாக பல்வேறு வழிகளில் அரியானா அரசு பழிவாங்குகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications