பசுவை கொல்பவர்களை தூக்கில் போடுவேன்.. சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் பேச்சு!
ராய்ப்பூர்: பசுவை கொல்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் என்று சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகளுக்கும், இறைச்சி வெட்டும் கூடங்களுக்கும் அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அனுமதியற்ற இறைச்சிக் கடைகள், கூடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் சில தினங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் விலங்குகளை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி பசுக்களை கொன்றால் 7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பசுக்களை கொல்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதைக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங், 'மாட்டைக் கொன்றால் தூக்கில் போடுவேன்' என்று கூறியுள்ளார். ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பசுவைக் கொல்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications