இந்தியா அழைத்து வரப்பட்டார் சோட்டா ராஜன்... டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
டெல்லி: இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜனை சிபிஐ அதிகாரிகள் டெல்லி அழைத்து வந்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் நிழல் உலக தாதாவாக விளங்கியவர் சோட்டா ராஜன் (55). இவர் மீது 70க்கும் அதிகமான கொலை, கடத்தல் வழக்குகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென இந்தியாவில் இருந்து, சி.பி.ஐ., மற்றும் மும்பை போலீசார் அடங்கிய குழு, இந்தோனேஷியா சென்றது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சோட்டா ராஜனை இந்தியா அனுப்ப இந்தோனேஷியா சம்மதித்தது.
ஆனால், சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வர இயற்கை ஒத்துழைக்கவில்லை. எரிமலை சீற்றம் காரணமாக பாலியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது.
நேற்று நிலைமை சீரானதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை அழைத்துக் கொண்டு சிபிஐ அதிகாரிகள் தனி விமானத்தில் இந்தியா புறப்பட்டனர். இன்று காலை 5.45 மணியளவில் அவர்கள் டெல்லி பாலம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து சோட்டா ராஜனை சிபிஐ அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இன்று அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சோட்டா ராஜன் அழைத்து வரப்பட்டதால் டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதோடு, சோட்டா ராஜன் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டுமின்றி, டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாவூத் கோஷ்டியால் ராஜனுக்கு ஆபத்து இருப்பதால் இவ்வாறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications