இந்தோனேசியாவில் சக கைதிகளால் உயிருக்கு ஆபத்து...சோட்டா ராஜன் தனி சிறைக்கு மாற்றம்!
பாலி: இந்தோனேசிய தென்பசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோட்டா ராஜனுக்கு சக கைதிகளினால் கொலை மிரட்டல் வந்துள்ளதால் தனி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தியாவால் தேடப்படும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் வலது கரமாக திகழ்ந்தவர் சேட்டாராஜன். 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தாவூத் இப்ராகிமை விட்டு சோட்டா ராஜன் பிரிந்தார்.

கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சோட்டா ராஜன் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தார். எனவே, இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் தலைமறைவாக தங்கியிருந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்திய போலீசுக்கு சிம்ம சொப்பனமாகவும், சர்வதேச போலீசுக்கு தண்ணி காட்டிய நிழல் உலக தாதா சோட்டா ராஜனை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி இந்தோனேசியாவின் பாலித்தீவில் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை பாலித்தீவில் உள்ள தென் பசார் சிறையில் போலீசார் அடைத்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சக கைதிகளின் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் காரணமாக நேற்று நள்ளிரவு அவர் சிறையில் உள்ள தனிஅறைக்கு மாற்றப்பட்டார். மற்ற கைதிகளிடம் இருந்து தன்னுடைய உயிருக்கு மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே சோட்டா ராஜன் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications