இந்தோனேசியாவில் சக கைதிகளால் உயிருக்கு ஆபத்து...சோட்டா ராஜன் தனி சிறைக்கு மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

பாலி: இந்தோனேசிய தென்பசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோட்டா ராஜனுக்கு சக கைதிகளினால் கொலை மிரட்டல் வந்துள்ளதால் தனி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தியாவால் தேடப்படும் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் வலது கரமாக திகழ்ந்தவர் சேட்டாராஜன். 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தாவூத் இப்ராகிமை விட்டு சோட்டா ராஜன் பிரிந்தார்.

Chhota Rajan change to separate prison

கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சோட்டா ராஜன் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தார். எனவே, இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் தலைமறைவாக தங்கியிருந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்திய போலீசுக்கு சிம்ம சொப்பனமாகவும், சர்வதேச போலீசுக்கு தண்ணி காட்டிய நிழல் உலக தாதா சோட்டா ராஜனை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி இந்தோனேசியாவின் பாலித்தீவில் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை பாலித்தீவில் உள்ள தென் பசார் சிறையில் போலீசார் அடைத்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சக கைதிகளின் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் காரணமாக நேற்று நள்ளிரவு அவர் சிறையில் உள்ள தனிஅறைக்கு மாற்றப்பட்டார். மற்ற கைதிகளிடம் இருந்து தன்னுடைய உயிருக்கு மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் இருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே சோட்டா ராஜன் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+