தாவூத் பற்றி அதிர்ச்சித் தகவல்களை கொட்டும் சோட்டா ராஜன்- போலீஸ் அதிகாரிகள் லிஸ்ட்டும் ரிலீஸ்
டெல்லி: நிழல் உலக தாதாவான தாவூத் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்களை சோட்டா ராஜன் வெளியிட்டுள்ளதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையிலிருந்து சோட்டா ராஜனை சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று இந்தோனேசியாவில் இருந்து இந்தியா கொண்டு வந்தனர்.
தெற்கு டெல்லியில் லோதி சாலையில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ. அலுவலகத்தை சுற்றி 200க்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் கமாண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணை துவக்கம்:
சோட்டா ராஜனிடம் நேற்று காலை முறைப்படி விசாரணை தொடங்கியது. உளவுத்துறை, ரா, சி.பி.ஐ மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவு அதிகாரிகள் என 4 குழுவினர் அடுத்தடுத்து சோட்டா ராஜனிடம் விசாரணை நடத்தினார்கள்.

முழு ஒத்துழைப்பு:
விசாரணைக்கு சோட்டா ராஜன் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார். உளவுத்துறையினரும், சி.பி.ஐ. அதிகாரிகளும் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் தயங்காமல் பதில் அளிக்கிறார்.

தாவூத் பற்றி திடுக் தகவல்கள்:
குறிப்பாக பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் பற்றி ஏராளமான தகவல்களை கூறி வருகிறார். தாவூத் இப்ராகிம் பற்றி அவர் கூறும் சில தகவல்கள் உளவுத் துறையினருக்கு புதிதாக உள்ளன. குறிப்பாக பாகிஸ்தானில் தாவூத் இப்ராகிம் தங்கும் 3 ரகசிய இடங்களை சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.

போலீஸ் அதிகாரிகள்:
தாவூத் இப்ராகிமுடன் மும்பை போலீசார் சிலர் இப்போதும் தொடர்பில் உள்ளனர். அந்த போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் சி.பி.ஐ.யிடம் சோட்டா ராஜன் கூறியுள்ளார். இந்த தகவல்கள் உண்மைதானா என்று சி.பி.ஐ.யின் மற்றொரு குழு ஆய்வைத் தொடங்கி உள்ளது.

ஆய்வுக்கு பின் நடவடிக்கை:
சோட்டா ராஜன் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் விசாரணைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் உள்ளதாக உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த தகவல்களை ஆய்வு செய்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications