காங்கிரஸில் கலகக் குரல்.. ப.சிதம்பரம் மீது பரத்வாஜ், சுதர்சன நாச்சியப்பன் பாய்ச்சல்!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங் மீது குற்றம்சாட்டிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஹெச்.ஆர். பரத்வாஜ், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸில் மேலிடத்துக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்கின்றன. இதில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் தலைவராக வேண்டும் என்று சிதம்பரம் கருத்து தெரிவிக்க இதற்கு கடும் கண்டனங்கள் வந்து விழுந்தன.

இதனைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் அம்பலமான போதே, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ராஜினாமா செய்திருக்க வேண்டும்; ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்திருக்க வேண்டும் என்று அடுத்த விமர்சனத்தை முன்வைத்தார் சிதம்பரம்.
இதுவும் காங்கிரஸ் கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஹெச்.ஆர். பரத்வாஜ், தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரம், திமுகவுக்கு ஆதரவாகக் கருத்தைக் கூறுகிறார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வெளிப்படையாக இயங்க வேண்டும் என்பதுதான் மன்மோகன்சிங்கின் நிலைப்பாடு. மன்மோகன்சிங்கிடம் உரிமங்களை ரத்து செய்யுமாறு சிதம்பரம் ஒருபோதும் சொல்லவே இல்லை. இதை நான் நன்கு அறிவேன் என்றார்.
மேலும் ராகுல் காந்தியின் தலைமைக்கு பதிலாக பிரியங்கா காந்தி அரசியலுக்கு வர வேண்டும் என்ற குரல் குறித்து கருத்து தெரிவித்த பரத்வாஜ், பிரியங்காவால்தான் காங்கிரஸை காப்பாற்ற முடியும். அவருக்கு கூடுதல் பொறுப்புகளை சோனியா காந்தி கொடுக்க வேண்டும் என்றார்,
சுதர்சன நாச்சியப்பன்
இதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரான சுதர்சன நாச்சியப்பனும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மன்மோகன்சிங்கை குறை கூறுவது சரியல்ல. ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பொறுப்பு என்று கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications