விவாகரத்து கேட்டு வந்த தம்பதியரை சேர்த்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
விவாகரத்து கேட்டு லோக் அதாலத் நீதிமன்றம் வந்த தம்பதியரை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சேர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஹூப்ளி: கர்நாடகா மாநிலத்தில் நடந்த சிறப்பு லோக் அதாலத் நிகழ்ச்சியில், விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வந்த தம்பதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுரை வழங்கி இருவரையும் சேர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் புதியதாக கட்டப்பட்ட நீதிமன்ற வளாக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வந்தார். நீதிமன்ற கட்டிடங்களை திறந்து வைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அங்கே ஏற்பாடு செய்யப்பட்ட லோக் அதாலத் என்கிற சிறப்பு நீதிமன்ற முகாமில் வழக்குகளை விசாரித்தார்.

அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் ஒரு தம்பதியினரின் விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தம்பதிகளை சேர்ந்து வாழ அறிவுரைகளைக் கூறினார். நீதிபதியின் அறிவுரையைக் கேட்ட தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ்வதாக உறுதி கூறினர்.
இதைத் தொடர்ந்து, அந்த தம்பதிகள் தங்களுடைய விவாகரத்து வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, குழந்தைகளுடன் இருவரும் சேர்ந்து வாழ்வதாக உறுதியளித்ததொடு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த சிறப்பு நீதிமன்ற முகாமில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராம் 5 வழக்குகளை சிறப்பாக முடித்துவைத்தார்.
அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விவாகரத்து குறித்து கூறுகையில், "விவகாரத்து வழக்குகள் குடும்பத்தை பலவீனப்படுத்துகின்றன. இது சமுதாயத்தில் பெரும் தாக்கத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. பிரிந்து வாழும் தம்பதிகள் குழந்தைகளின் வருங்கால வாழ்வைக் கருத்தில் கொண்டு மீண்டும் இணைந்து வாழ வேண்டும்" என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications