Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் ஆர். என். ரவி - பாதுகாப்பு விவகாரம்: முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன?

Subscribe to Oneindia Tamil

ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆளுநருக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, ஆளுநர் காரின் மீது கருப்புக் கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

"ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க திருக்கடையூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, அவர் வருகையின்போது நடைபெற்ற போராட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) தெளிவான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். ஆளுநர் காரும் அவருடைய பாதுகாப்பு வாகனங்களும் பாதிக்கப்படவில்லை என டிஜிபி விளக்கமளித்துள்ளார்.

போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. மத்திய மண்டல காவல்துறை ஐஜியின் தலைமையில் ஆளுநரின் பாதுகாப்புக்காக 6 எஸ்.பிக்கள் 6 கூடுதல் எஸ்.பிக்கள் 21 டிஎஸ்பிக்கள், 54 ஆய்வாளர்கள் 102 உதவி ஆய்வாளர்கள் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்யாது என உறுதியோடு கூறுகிறேன்" என தெரிவித்தார்.

வெளிநடப்பு செய்த அதிமுகவினர்

இன்று ஆளுநருக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, ஆளுநர் காரின் மீது கருப்புக் கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

எடப்பாடி
Getty Images
எடப்பாடி

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்துகொண்டு அங்கிருந்து காரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

அச்சமயத்தில் ஆளுநர் கார் மணப்பந்தல் என்ற இடத்தைக் கடந்தபோது, ஆளுநர் கார் மீதும் பாதுகாப்புக்கு சென்ற அதிகாரிகள் கார் மீதும் கற்கள், கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆளுநருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தும், முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்காமல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னின்று காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+