ஆளுநர் ஆர். என். ரவி - பாதுகாப்பு விவகாரம்: முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன?
ஆளுநருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆளுநருக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, ஆளுநர் காரின் மீது கருப்புக் கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க திருக்கடையூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, அவர் வருகையின்போது நடைபெற்ற போராட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, கூடுதல் டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) தெளிவான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.
- ஸ்டாலின் விளக்கம்: ஆளுநரோடு விரோதம் இல்லை, ஆனால் ஏன் தேனீர் விருந்துக்குப் போகவில்லை?
- நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தமிழ்நாடு ஆளுநர் முடிவு
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். ஆளுநர் காரும் அவருடைய பாதுகாப்பு வாகனங்களும் பாதிக்கப்படவில்லை என டிஜிபி விளக்கமளித்துள்ளார்.
போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. மத்திய மண்டல காவல்துறை ஐஜியின் தலைமையில் ஆளுநரின் பாதுகாப்புக்காக 6 எஸ்.பிக்கள் 6 கூடுதல் எஸ்.பிக்கள் 21 டிஎஸ்பிக்கள், 54 ஆய்வாளர்கள் 102 உதவி ஆய்வாளர்கள் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்யாது என உறுதியோடு கூறுகிறேன்" என தெரிவித்தார்.
வெளிநடப்பு செய்த அதிமுகவினர்
இன்று ஆளுநருக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, ஆளுநர் காரின் மீது கருப்புக் கொடிகள் வீசப்பட்டதாகக் கூறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்துகொண்டு அங்கிருந்து காரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
அச்சமயத்தில் ஆளுநர் கார் மணப்பந்தல் என்ற இடத்தைக் கடந்தபோது, ஆளுநர் கார் மீதும் பாதுகாப்புக்கு சென்ற அதிகாரிகள் கார் மீதும் கற்கள், கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆளுநருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தும், முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்காமல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னின்று காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்













Click it and Unblock the Notifications