குழந்தை கடத்தல் வதந்தி: கர்நாடகாவில் ஐடி பணியாளர் படுகொலை.. 4 பேர் படுகாயம்.. 32 பேர் கைது
கர்நாடகாவில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 4 பேரை பொதுமக்கள் மோசமாக தாக்கியுள்ளனர்.
பெங்களூரில்: கர்நாடகாவில் குழந்தை கடத்தல் கும்பல் என கருதி 4 பேரை பொதுமக்கள் மோசமாக தாக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட விபத்தில் ஐடி பணியாளர் ஒருவர் பலியாகி உள்ளார்.
உங்கள் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது, பாதுகாப்பாக இருங்கள் என்று பரவியது.மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான இந்த வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 31 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் வதந்தி காரணமாக திருவண்ணாமலையில் ருக்மணி என்ற மூதாட்டியும், திருவள்ளூரில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், ராஜஸ்தான் , ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் எல்லா இத பொய்யான தகவல் சென்றுள்ளது.
இந்த நிலையில் இந்த வதந்தி காரணமாக கர்நாடகாவில் பிடார் பகுதியில் 4 பேரை பொதுமக்கள் மோசமாக தாக்கியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த இவர்கள் தெருவில் பார்த்த ஏழை குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்ததற்காக 50 பேர் கொண்ட கும்பலால் மோசமாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதோடு காரில் சென்றவர்கள் விரட்டு விரட்டு தாக்கியுள்ளனர். இதனால் அந்த கார் பாலத்தின் சுவர் மீது மோதி, கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த ஐடி பணியாளர் முகமது அசாம் பலியாகி உள்ளார். அவரது நண்பர்கள், 4 பேர் மோசமாக காயமடைந்து இருக்கிறார்கள்.
இந்த கொலையில் ஈடுபட்ட மக்கள் யார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications