விரைவில்.. மொத்தமாக படைகளை வாபஸ் வாங்குகிறோம்.. லடாக்கில் பின்வாங்கும் சீனா.. இந்தியா அதிரடி!
லடாக்: லடாக் எல்லையில் இருந்து விரைவில் மொத்தமாக படைகளை வாபஸ் பெறுவோம் என்று சீனா இந்தியாவிற்கு வாக்களித்து உள்ளது. இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை சார்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Recommended Video
லடாக் எல்லை பிரச்சனை ஏறத்தாழ முடியும் தருவாயை எட்டி இருக்கிறது. அங்கு கடந்த மே மாதம் 5ம் தேதி சீனா அத்துமீறியது. இதை தொடர்ந்து அடிக்கடி எல்லையில் இரண்டு நாட்டுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் கல்வான் அருகே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இடையே நடந்து பேச்சுவார்த்தை மூலம் அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டது. ஜூலை 5ம் தேதி எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டது .

வாபஸ் வாங்கியது
லடாக்கில் மூன்று எல்லை பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது. அதன்படி டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்தும் சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. இங்கு இருந்து மொத்தம் 2 கிமீ பகுதிக்கு சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி இருக்கிறது. ஆனால் பாங்காங் திசோவின் கட்டுப்பாட்டு பகுதி 4ல் இருந்து சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை.

எங்கு படைகள்
மேலும் கோக்ரா பகுதியில் இருக்கும் ரோந்து புள்ளி 17ஏ- ல் இருந்தும் சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. இங்கு மொத்தமாக 40 ஆயிரம் சீன வீரர்கள் வரை இன்னமும் இருக்கிறார்கள். அங்கு படைகளை வாபஸ் வாங்க சீனா மறுத்து வருகிறது. பெரும்பாலும் குளிர் காலத்தை மனதில் வைத்து எல்லையில் அத்துமீறலாம் என்று சீனா ஏதாவது திட்டம் போட வாய்ப்புள்ளது. இதனால் இந்தியா அங்கே கவனமாக இருக்கிறது.

மீட்டிங் நடந்தது
இந்த நிலையில்தான் எல்லையில் லடாக் எல்லையில் இருந்து விரைவில் மொத்தமாக படைகளை வாபஸ் பெறுவோம் சீனா இந்தியாவிற்கு வாக்களித்து உள்ளது. இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை சார்பாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நேற்று Working Mechanism for Consultation & Coordination எனப்படும் WMCC குழு சார்பாக இந்த மீட்டிங் நடந்தது.

யார் கலந்து கொண்டார்
இந்த மீட்டிங்கில் இந்தியா சார்பாக நவீன் ஸ்ரீவஸ்தவா கலந்து கொண்டர் .அதேபோல் சீனா சார்பாக ஹாங் லியாங் கலந்து கொண்டார். இந்த மீட்டிங் நேற்று இரவு வரை நடந்தது. மீட்டிங்கின் முடிவில் படைகளை வாபஸ் வாங்குவதாக சீனா அறிவித்தது. எங்கு எல்லாம் படைகள் வாபஸ் பெறப்படவில்லையோ அங்கு எல்லாமே படைகளை வாபஸ் வாங்க முடிவு செய்துள்ளனர்.

துரிதம்
அதேபோல் துரிதமாக எல்லையில் படைகளை வாபஸ் வாங்கவும். அஜித் தோவல் உடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் எடுக்கப்பட்ட முடிவுகளை மதிக்கவும் சீனா ஒப்புக்கொண்டு இருக்கிறது. வேகமாக எல்லையில் படைகள் பின்வாங்கும். இந்தியாவும் இன்னொரு பக்கம் குறிப்பிட்ட தொலைவுக்கு எல்லையில் பின்வாங்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் விரைவில் முழு அமைதி திரும்பும் என்கிறார்கள்.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!












Click it and Unblock the Notifications