"காப்பு" சமூகத் தலைவரைப் பார்க்கச் சென்ற நடிகர் சிரஞ்சீவிக்கு ‘காப்பு’... ராஜமுந்திரி ஏர்போர்ட்டில்!
ஹைதராபாத்: காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் காப்பு சமூகத் தலைவர் பத்மநாபனைச் சந்திக்கச் சென்ற நடிகர் சிரஞ்சீவியை, ராஜமுந்திரி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி காப்பு சமூகத் தலைவர் பத்மநாபம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி அருகே உள்ள கிரிலம்புடியில் உள்ள தனது வீட்டில் கடந்த வெள்ளியன்று இந்த உண்ணாவிரதத்தை அவர் தொடங்கினார்.
பத்மநாபமுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் காப்பு சமூக மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இட ஒதுக்கீடு கேட்டு ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், சில இடங்களில் இளைஞர்கள் செல்போன் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

4வது நாள்...
உண்ணாவிரதம் தற்போது 4வது நாளை எட்டியுள்ள நிலையில், பத்மநாபமின் மனைவி சோர்வடைந்து படுக்கையில் உள்ளார். ஆனபோதும், மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் இருவரும் மறுத்து வருகின்றனர். இதனால் கிரிலம்புடி கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

போலீசார் பாதுகாப்பு...
பாதுகாப்புக்காக பத்மநாபம் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய படை போலீசாரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பத்மநாபனைக் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க பத்மநாபம் யாரும் சந்திக்க விடாமல் போலீசார் தடுத்து வருகின்றனர்.

சிரஞ்சீவி...
இந்நிலையில், பத்மநாபமைச் சந்திப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் எம்.பியுமான நடிகர் சிரஞ்சீவி இன்று கிரிலம்புடிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிரஞ்சீவியும் அதே காப்பு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு...
இதனால் பத்மநாபமைச் சந்தித்ததும் அவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

கைது...
ஆனால், அசம்பாவிதங்களைத் தடுக்க நினைத்த போலீசார், ராஜமுந்திரி விமான நிலையத்தில் சிரஞ்சீவியையும், அவருடன் வந்த காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்தனர்.

கண்டனம்...
சிரஞ்சீவியும், காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டதற்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரசார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications