59வது பிறந்தநாள்: வயதானாலும் சிரஞ்சீவி 'ராக்ஸ்டார்' தான்
ஹைதராபாத்: நடிகரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சிரஞ்சீவி இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார்.
தெலுங்கு திரை உலகை ஒரு காலத்தில் தனது நடிப்பால் ஆட்சி செய்தவர் சிரஞ்சீவி. அரசியலுக்கு வந்து தற்போது எம்.பி.யான பிறகு அவர் படங்களில் நடிக்காமல் உள்ளார். ஆனால் அவரை மீண்டும் நடிக்க வைக்காமல் அவரது ரசிகர்கள் ஓயமாட்டார்கள் போன்று.
அப்படி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள சிரஞ்சீவி இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நாளில் சிரஞ்சீவியின் சினிமா பயணம் பற்றி பார்ப்போம்.

சிரு
1955ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி சிவசங்கர வர பிரசாத் கொனிடலாவாக பிறந்தவர் சிரஞ்சீவி. சென்னையில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் தான் நடிப்பை கற்றுக் கொண்டார்.

முதல்படம்
ராஜ்குமார் இயக்கத்தில் 1979ம் ஆண்டில் வெளியான புனதிரல்லு தான் சிரஞ்சீவி நடித்த முதல் படம்.

ராமைய்யா
1982ம் ஆண்டு வெளியான இன்ட்லோ ராமைய்யா வீதிலோ கிருஷ்ணய்யா படம் தான் சிரஞ்சீவிக்கு கிடைத்த முதல் ஹிட்.

வெற்றிகள்
தெலுங்கு திரை உலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்தார் சிரஞ்சீவி. அவரை ஆந்திரா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

டான்ஸ்
சிரஞ்சீவி நடிப்பதோடு மட்டும் அல்லாமல் சூப்பராக டான்ஸும் ஆடுவார். அவர் நடிப்பில் வெளியான தெலுங்கு படங்கள் பல தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டன.

ஆடை
தெலுங்கு நடிகர்கள் பச்சை கலர் பேண்ட், மஞ்சள் கலர் சட்டை என்று கலர், கலராக ஆடை அணிந்து வருவார்கள். அதற்கு சிருவும் விதிவிலக்கு அல்ல.

அரசியல்
ரசிகர்கள் பட்டாளம் உள்ள சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை துவங்கினார். பின்னர் அந்த கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிட்டார்.

பிறந்தநாள்
சிரஞ்சீவியின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார். ஹைதராபாத்தில் நடந்த கொண்டாட்டத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா கலந்து கொண்டார்.

இணையதளம்
பிறந்தநாளையொட்டி சிரஞ்சீவியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications