டெல்லி தேவாலய தாக்குதல்கள் அனைத்தும் மதவாத மோதல்கள் அல்ல: டெல்லி போலீஸ்
டெல்லி: டெல்லியில் தேவாலயங்கள் மதமோதல்களின் போது தாக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லியில் தில்சாத் கார்டன் தேவாலயம் தீ வைத்து எரிக்கப்பட்ட போது கிறிஸ்துவர்கள் மீதான மதவெறித் தாக்குதல் என்று கூறப்பட்டது. ஆனால் டெல்லி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையிலோ மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மொத்தம் 6 தேவாலய தாக்குதல் வழக்குகளையும் டெல்லி போலீசார் விசாரித்திருக்கின்றனர்.. இதில் ஒரு தேவாலயம் சூறையாடப்பட்ட சம்பவமும் அடங்கும்.
ஆனால் தேவாலயங்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படும் 2 சம்பவங்களுமே மின்கசிவால் ஏற்பட்டது; மேலும் 2 சம்பவங்களானது தனிநபர் மோதல்களால் தேவாலயங்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது.
எஞ்சிய 2 தேவாலயங்களும் திருட்டு சம்பவங்களின் போது தாக்குதல்களுக்குள்ளானவை என்கிறது டெல்லி போலீசின் அறிக்கை.
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு
இதேபோல் மேற்கு வங்கத்தில் வயதான கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டதன் பின்னணியில் மதவாதிகள் இருப்பதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 வங்கதேச நாட்டவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தேவாலயத்துக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஒரு பெரும் கும்பல் சென்றதாகவும் அப்போது அதை தடுக்க முயன்ற கன்னியாஸ்திரி தாக்கப்பட்டார் என்றும் மேற்கு வங்க சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்துள்ளனர். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய கும்பல் கொள்ளையடிக்கும் நோக்கத்தில்தான் அங்கே சென்றதே தவிர கிறிஸ்தவர்கள் என்பதற்காக செல்லவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லியைப் பொறுத்தவரையில் 240 தேவாலயங்கள் உள்ளன. இதில் 161 தேவாலயங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதரவி போலீஸ் வாகனங்கள் தேவாலயங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோன்ற பாதுகாப்பு கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன என்கிறது டெல்லி போலீஸ்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications