ஹரியானாவில் "தேவாலயம்" சூறையாடல்: சிலுவைக்கு பதில் ஹனுமான் சிலையை வைத்த கும்பல்!!
சன்டிகர்: ஹரியானா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தை ஒரு கும்பல் சேதப்படுத்தியுள்ளது. மேலும் தேவாலயத்தில் இருந்த சிலுவையை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஹனுமானின் சிலையை வைத்துள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கைம்ரி கிராமத்தில் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தேவாலயத்திற்குள் ஒரு கும்பல் புகுந்து அதை சேதப்படுத்தியுள்ளது. தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலுவையை உடைத்துவிட்டு அந்த இடத்தில் ஹனுமானின் சிலையை அந்த கும்பல் வைத்துள்ளது.

மேலும் அந்த கும்பல் தேவாலயத்தில் ராமர் கொடியை பறக்கவிட்டதுடன் அங்கிருந்த பாதிரியார் வில்லிவார்ஷை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிரியார் போலீசில் புகார் அளித்தார்.
அந்த கும்பல் தேவாலயத்தை சேதப்படுத்தி, ஹனுமான் சிலையை வைத்துவிட்டு, அங்கிருந்த சில பொருட்களை திருடிச் சென்றதாக பாதிரியார் தெரிவித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு ஹரியானா மாநில கிறிஸ்தவ முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு அந்த அமைப்பு போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications