டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் வலுக்கட்டாய அகற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வந்த அய்யாகண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாகண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் கடந்த பல நாட்களாக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று இரவு விவசாயிகளில் ஒரு பகுதியினரை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றினர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜந்தர் மந்தரில் போராடி வந்த தமிழக விவசாயிகள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை மறுநாள் மறுபடியும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications