கிராமப் பாதுகாப்பு குழுக்களைக் கலைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்... யாசின் மாலிக் கைதால் ஸ்ரீநகரில் மோதல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவரான யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் பல்வேறு இடங்களில் மோதல் வெடித்தது.
காஷ்மீரை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என பிரிவினைவாத இயக்கமான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவரான யாசின் மாலிக் போராடி வருகிறார்.

இந்நிலையில், இன்று மைசூமா, கவ்காடல் மற்றும் லால் சவுக் பகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவரான யாசின் மாலிக் தலைமையில், கிராமப் பாதுகாப்பு குழுக்களைக் கலைக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்காரர்கள் சிட்டி செண்டர் அருகில் வந்தபோது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதோடு யாசின் மாலிக்கையும் அவர்கள் கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். கற்களை வீசியும் அவர்கள் தாக்கினர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, அவர்களைக் கலைத்தனர்.
யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இதற்கிடையே ஹுரியத் எனப்படும் பிரிவினைவாத இயக்கத்தின் மூத்த தலைவர் சையத் அலி ஷா கிலானி கிராமப் பாதுகாப்பு குழுக்களைக் கலைக்கக் கோரி நாளை கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications