உ.பி.: 8ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து உயிருடன் எரித்துக் கொன்ற ரவுடி உள்பட 3 பேர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஜலாவ்ன் மாவட்டத்தில் உள்ள சிர்சா காலார் கிராமத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி தனது அக்காவுடன் அருகில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். வயலில் இருந்து வீடு திரும்பும்போது உள்ளூரைச் சேர்ந்த ரவுடி ராம் பகதூர் உள்பட 3 பேர் அந்த சிறுமியை அருகில் உள்ள இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதையடுத்து நடந்த விவகாரம் குறித்து கிராமத்தினரிடம் கூறுவேன் என்று சிறுமி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து சிறுமி மீது தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதற்கிடையே சிறுமியின் அக்கா ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வரச் சென்றுவிட்டார். அவர் ஆட்களுடன் வருவதற்குள் சிறுமிக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று இரவு நடந்தது.
காயம் அடைந்த சிறுமி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். ஆனால் இந்த சம்பவம் பற்றி சிறுமியின் குடும்பத்தார் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருப்பினும் சம்பவம் பற்றி அறிந்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications