திரிபுரா புதிய முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு!

திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. 25 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

CM and Dept. CM announced for Tripura

இதில் மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 43 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 35 இடங்களையும், திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியது.

இடதுசாரிகள் 16 இடங்களில் வென்று இருக்கிறார்கள். காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதன் மூலம் இந்தியாவின் ஏழை முதல்வர் தனது பதவியை இழந்து இருக்கிறார்.

இந்த நிலையில் திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிப்லாப் குமார் தேப் திரிபுரா மாநில பாஜக தலைவராக கடந்த 2016ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக வேலை செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் பண்ணாமலிபூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

மேலும் துணை முதல்வராக ஜிஸ்னு தேவ் வர்மன் பதவியேற்கிறார்.இவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+