ஆந்திரத்தை ஒருபோதும் பிரிக்கவிட மாட்டேன்: முதல்வர் கிரண்குமார் ரெட்டி
Subscribe to Oneindia Tamil

கடப்பா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரண்குமார் ரெட்டி, தனி மனிதர்கள் எப்போதுமே நிரந்தரமானவர்கள் அல்ல. ஆனால் மாநிலம் என்பது நிலையான ஒன்று.
ஆந்திர மக்களின் ஆதரவுடன் மாநிலத்தைப் பிரிக்காமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன். மாநிலத்தின் எதிர்கால நலனைப் பற்றி சிந்திப்பவர்கள் யாரும் ஆந்திரத்தைப் பிரிப்பதற்கு துணைபோக மாட்டார்கள்.
தன்னலமுடையவர்கள்தான் இதற்கு துணை போவார்கள். ஆந்திராவை பிரிக்கவிடவே மாட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications