எக்சிட் போல்: பீகாரில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்கிறது சிஎன்என்-ஐபிஎன் டிவி
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி மட்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கி இடையே மிக நெருக்கமான கடும் போட்டி இருக்கும் என்று சிஎன்என் ஐபிஎன் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டமாக நடத்தப்பட்டது. 5வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று மட்டும் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்தியா டுடே- சிசேரோ கருத்துக்கணிப்பின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 120 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதள கூட்டணி 117 இடங்களிலும், பிற கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
சிஎன்என்-சி வோட்டர் கருத்துக்கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 111 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதள கூட்டணி 122 இடங்களிலும், பிற கட்சிகள் 10 இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 115 முதல் 119 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதள கூட்டணி 120 முதல் 124 இடங்களிலும், பிற கட்சிகள் 3 முதல் 5 இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
மூன்று கருத்துகணிப்பு முடிவுகளில் சிவோட்டர் தவிர்த்த பிற இரு கருத்துக்கணிப்புகளின்படி பீகாரில் இரண்டு கூட்டணிகளுக்கும் இடையே மிக நெருக்கமான கடும் போட்டி இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications