நிலக்கரி சுரங்க ஊழல்: குமார் மங்கலம் பிர்லா மீது சிபிஐ வழக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

Coalgate: Kumar Mangalam named in new FIR, Hindalco shares fall
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 13 முதல் தகவல் அறிக்கை பதிவு (எஃப். ஐ. ஆர்) செய்யப்பட்டுள்ளது.

தற்போது 14வது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. இதில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அவரது நிறுவனமான ஹிண்டால்கோ, மத்திய அரசு நிறுவனமான நால்கோ மற்றும் முன்னாள் நிலக்கரி அமைச்சக செயலர் பி.சி. பிரகாஷ் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த கையோடு டெல்லி, கொல்கத்தா, புவனேஸ்வர், மும்பையில் பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இதனால் ஹிண்டால்கோ நிறுவனத்தின் பங்குகள் இன்று சரிவை எதிர்கொண்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+