சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி) அமல்படுத்தினால் ஆலைகளை மூடுவோம்... மிரட்டுகிறது கோக கோலா
டெல்லி: ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரியை அமல்படுத்தினால் இந்தியாவில் செயல்படும் கோக கோலா ஆலைகளை மூடுவோம் என அந்நிறுவனம் மிரட்டியுள்ளது.
குளிர்பானங்களை தயாரித்து வரும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கோக கோலா நிறுவனம் இந்தியாவில் 57 ஆலைகளை நடத்தி வருகிறது.

அண்மையில் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் அளித்துள்ள பரிந்துரையில், சரக்கு-சேவை எனப்படும் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் காற்றடைத்த குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, குடிநீர், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் சேர்க்கப்படும். அவைகளுக்கு 40% வரை ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கோக கோலா நிறுவனத்தின் துணைத் தலைவர் இஸ்தியக் அம்ஜத், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இந்திய குளிர்பான நிறுவனங்களின் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கும்.
இது அரசின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு எதிராகவும் அமையும். அரவிந்த் சுப்பிரமணியனின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் குளிர்பான நிறுவன தொழிலே அடியோடு முடங்கிவிடும்.
இத்தொழில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான சிறு வியாபாரிகள், முகவர்கள், போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோர், குளிர்பான பாட்டில்கள் தயாரிப்போர், குளிர்பான நிறுவனங்களுக்கான மூலப் பொருள்கள் தயாரிப்போர் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதனால் கோக கோலா நிறுவனத்துக்காக இந்தியாவில் செயல்படும் சில ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications