ஹைதராபாத்தில் சீக்கியர்கள், முஸ்லீகள் இடையே மோதல்: நடந்தது என்ன?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சீக்கியர்களின் மதக் கொடி எரிக்கப்பட்டதால் அவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஹைதராபாத்தின் கிஷன்பாக் பகுதியில் உள்ள சிக் சவுனியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சீக்கியர்களின் மதக்கொடியை எரித்துள்ளனர். இதைடுத்து சீக்கயர்களுக்கும், அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்துள்ளது. அதன் பிறகு பிரச்சனை அடங்கி அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சில சீக்கிய வாலிபர்கள் வாள்களுடன் வந்து சிக் சவுனியில் வசிக்கும் முஸ்லீகளின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். மேலும் முஸ்லீம்களின் உடைமைகளை தீ வைத்து எரித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பக்கத்து பகுதி முஸ்லீம்கள் அங்கு கூடினர். இதையடுத்து சீக்கியர்கள் மற்றும் முஸ்லீம்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கினர். மேலும் 10 தனியார் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

உடனே எல்லை பாதுகாப்பு படையினர் அங்கு வந்தனர். துணை ராணுவத்தினர் முதலில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். அப்படியும் கூட்டம் கலையாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். பலியான 4 பேரும் முஸ்லீம்கள்.
மோதல் நடந்த இடத்தில் 144 தடை உத்ததரவு பிறப்பிக்கப்பட்டதுடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிக் சவ்னி பகுதியில் முன்னதாக 2006ம் ஆண்டு சீக்கியர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications