திரிபுராவில் நோட்டாவுடன் மல்லுக்கட்டும் பரிதாப நிலைக்கு போன காங்.
திரிபுராவில் நோட்டாவுடன் மல்லுக்கட்டும் பரிதாப நிலைக்கு போய்விட்டது காங்கிரஸ்.
Subscribe to Oneindia Tamil
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் நோட்டாவுக்கும் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கும் இடையே போட்டி இருந்தது என்கிற நிலைமையை வெளிப்படுத்துகின்றன தேர்தல் முடிவுகள்.
திரிபுராவில் காங்கிரஸ் கட்சி அழிவை சந்தித்துவிட்டது. அக்கட்சி அப்படியே பாஜகவாக உருமாறி தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் தாவிவிட்டனர்.

இதனால் பாஜக அமோக வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸுக்கு 1.8% அதாவது 41,325 வாக்குகள்தான் கிடைத்தது. காங்கிரஸைத் தொடர்ந்து நோட்டா 1.0% வாக்குகளை அதாவது 23735 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஒருகாலத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காங்கிரஸ் நோட்டாவுடன் மல்லுக்கட்டும் பரிதாப நிலைக்கு போய்விட்டது.












Click it and Unblock the Notifications