மோடியை துண்டு துண்டாக வெட்டப் போவதாக மிரட்டிய காங். வேட்பாளருக்கு ஜாமீன்
அலகாபாத்: மோடியை வெட்டிக் கொல்லப் போவதாக பிரச்சாரத்தில் கூறியதற்காக கைது செய்யப் பட்ட காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் இம்ரான் மசூத். இவர் கடந்தவாரம் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்த போது, ‘உத்தரப் பிரதேசத்தை மற்றொரு குஜராத்தாக மாற்ற நரேந்திர மோடி முயன்றால், அவரை துண்டு துண்டாக வெட்டி கூறுபோடுவேன்' என ஆவேசமாகக் கூறினார்.
இதனால் சகாரன்பூர் போலீசார் இம்ரான் மசூத்தைக் கைது செய்தனர். தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசியது தொடர்பான சிடி ஆதாரம் அம்மாவட்ட ஆட்சியர் மூலமாக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இம்ரான். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இம்ரான் மசூத்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications