சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் கூடியது காங்கிரஸ் செயற்குழு.. ராகுல் காந்திக்கு தலைவர் பதவி?
டெல்லி: ஜனாதிபதி தேர்தல் மற்றும் ராகுல்காந்திக்கு பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு இன்று டெல்லியில் கூடியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட அக்கட்சி மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் நாட்டில் நடக்கும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படுவதோடு சில முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த முறை நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. ராகுல் காந்தி தலைமையில் அந்த கூட்டம் நடந்தது. தற்போது 7 மாதம் கடந்துவிட்ட நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களை சோனியா சந்தித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று நடக்கும் செயற்குழுவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி உயர்த்தலாமா அல்லது வேறு ஒருவரை அதற்கு நியமிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலையொட்டி அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படும்.












Click it and Unblock the Notifications