தைரியமிருந்தால் கர்நாடக அரசை கலைக்க வேண்டியதுதானே? மோடிக்கு காங்கிரஸ் பதிலடி
பெங்களூர்: கர்நாடக அரசு மீது ஊழல் புகார்களை கூறும் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியை கலைக்க வேண்டியதுதானே என காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவிலுள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, '10 சதவீத கமிஷன்' அரசு என குற்றம்சாட்டினார். 10 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டுதான் அரசு பணிகளுக்கு உரிமை வழங்கப்படுவதாக மோடி தனக்கே உரிய பாணியில் கேலி செய்தார்.

மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவோ, கர்நாடகா, 30 சதவீத கமிஷன் மாநிலம் என்று விமர்சனம் செய்தார்.
இதனால் கோபமடைந்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, உங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா 100 சதவீதம் கமிஷன் வாங்க கூடியவர். அவரிடம் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளவும் என டுவிட்டரில் பதிலடி கொடுத்தார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உக்ரப்பா இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஊழல் புகாரின்பேரில், அரசியலமைப்பின், 356வது பிரிவின்கீழ், கர்நாடக அரசை மத்திய அரசு கலைக்கலாமே? ஏன் அதை மத்திய அரசு செய்யவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டியதுதானே என உக்ரப்பா கேள்வி எழுப்பினார்.
பாஜக இல்லாத பாரதம் என்பது ராஜஸ்தானில் தொடங்கிவிட்டது. நான் பாஜக இல்லாத இந்தியா வேண்டும் என கூறவில்லை. மோடி இல்லாத இந்தியா தேவை. இவ்வாறு உக்ரப்பா தெரிவித்தார்.
-
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
நாகர்கோவிலில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி.. வழிநெடுக பூக்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications