6 பெண்களுடன் உல்லாசம்... ஆபாச சிடியில் சிக்கியவரை காந்தி, நேருவுடன் ஒப்பிட்ட 'ஆம் ஆத்மி' அஷூதோஸ்
டெல்லி: 6 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து சிறையில் இருக்கும் டெல்லி முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாரை மகாத்மா காந்தியுடன் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அஷூதோஸ் ஒப்பிட்டது சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லி அமைச்சராக சந்தீப் குமார் 6 பெண்களுடன் இருக்கும் ஆபாச சி.டி. வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தற்போது சந்தீப்குமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஷுதோஸ் தனது ப்ளாக்கில் சந்தீப் குமாரை மகாத்மா காந்தி, நேருவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது "நேரு, காந்தி போன்ற தலைவர்களும் சமூக எல்லைகளுக்கு அப்பால் தங்களுக்கு பிடித்தமான வாழ்வை வாழ்ந்துள்ளனர். அது போன்றுதான் சந்தீப் குமாரும்" எனக் குறிப்பிட்டிருந்தார் அஷூதோஸ். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ராஜ்காட் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது அஷூதோஸின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.