கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு ராகுல் செய்த பைத்தியக்காரத்தனம்.. காங். தலைவர் தாக்கு
கொச்சி: ராகுல் காந்தி ஒரு ஜோக்கர். அவரால்தான் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்தது என்று கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளதால் பரபரப்பாகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முஸ்தபா இதுகுறித்துக் கூறுகையில், ராகுல் காந்தி ஒரு ஜோக்கர். அவரை உடனடியா பொறுப்புகளிலிருந்து தூக்க வேண்டும். அவராக விலகாவிட்டால் இதை செய்ய வேண்டும்.
பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும். ஜோக்கர் மாதிரியே நடந்து கொள்கிறார் ராகுல் காந்தி. அவரால்தான் காங்கிரஸ் படு தோல்வியைச் சந்தித்து விட்டது.

பிரதமர் பதவி என்பது விளையாட்டு விஷயமல்ல. மக்களுக்கு யாரிடம் பொறுப்பைத் தருவது என்பது நன்றாகத் தெரியும். காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத தோல்வியை இந்த ராகுல் காந்தியால்தான் மக்கள் தந்து விட்டனர் என்று கூறியுள்ளார் முஸ்தபா.
மேலும் அவர் ராகுல் காந்தியைப் போட்டுத் தாக்குகையில் கம்ப்யூட்டரையும், இன்டர்நெட்டையும் வைத்துக் கொண்டு முட்டாள்தனமாக, பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டார் ராகுல் காந்தி. அவரைப் பாராட்டிப் பேசுவோரை மட்டுமே நம்பி செயல்பட்டார். அதனால்தான் இந்த அடி கிடைத்துள்ளது என்றார் அவர்.
அடேங்கப்பா.. என்னா ஒரு காரம் இவரது தாக்குதலில்..












Click it and Unblock the Notifications