தோல்வியை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்... : சோனியா, ராகுல் கருத்து
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை ஏற்பதாக தெரிவித்துள்ளனர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்,அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தியும்.
கடந்த 15ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி, இரு மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறுகையில், ‘தோல்வியை பணிவுடன் ஏற்று கொள்கிறோம். பொறுப்புடன் நடக்க முயற்சிப்போம்' எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். மாற்றம் வேண்டி மக்கள் ஓட்டளித்துள்ளனர். இன்னும் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற தொடர்ந்து கடினமாக உழைப்போம். வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு பாராட்டுக்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.