பட்ஜெட்: சதானந்த கவுடா வீட்டை முற்றுகையிட்டு பெயர் பலகையை பெயர்த்து காங்கிரஸ் போராட்டம்
டெல்லி: ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீடு குறித்து அமைச்சரவையிடம் அனுமதி கோரப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அமைச்சரவையிடம் கேட்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள சதானந்த கவுடாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் முகேஷ் சர்மா வீட்டு வாயிலில் இருந்த சதானந்த கவுடாவின் பெயர் பலகையை பெயர்த்து எடுத்தார். அத்தோடு நில்லாமல் பலகையை தரையில் போட்டு அதில் ஏறி நின்று தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கவுடா தற்போது வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ரயில்வே பட்ஜெட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications