தீவிர அரசியலில் குதிக்கிறார் பிரியங்கா.. உ.பி. முதல்வர் வேட்பாளராகிறார்?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும், அவர் உத்திரப்பிரதேச முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தம்பதியின் மகள் பிரியங்கா காந்தி. அவ்வப்போது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட போதும், திவிர அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார் அவர்.

முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திராகாந்தியைப் போன்றே ஆடை அணிந்து, மக்களைக் கவரும் தோற்றத்துடன் வளைய வரும் அவருக்கு கட்சியில் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
இதனால், அவரைத் தீவிர அரசியலில் ஈடுபடுத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, உத்திரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதாம்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பிலோ அல்லது கூட்டணி சார்பிலோ பிரியங்கா போட்டியிடலாம் என கட்சி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அகிலேசுக்கு எதிராக பிரபலமான, வலிமையான ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த உத்திரப்பிரதேச காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே, லோக்சபா தேர்தலின் போது பிரியங்காவின் பிரசாரம் பெரும் வரவேற்பை பெற்றதால் அவரை உத்திரப்பிரதேச காங்கிரசில் வேட்பாளராக்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறதாம்.
ஆனால் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீதான நில மோசடிப் புகார்கள் இந்த விவகாரத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும், எனவே இந்த விவகாரம் குறித்து சோனியாவும், ராகுலும் தெளிவான முடிவு எடுக்காமல் தாமதித்து வருவதாகவும் தெரிகிறது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications