68-வது குடியரசு தின நாளில் பாலியல் புகாரில் சிக்கிய 68-வயது ஆளுநர் சண்முகநாதன்: காங். காட்டம்
நாட்டின் 68-வது குடியரசு தின நாளில் பாலியல் புகாரில் 68-வயதாகும் ஆளுநர் சண்முகநாதன் சிக்கியது வெட்க கேடானது என காங்கிரஸ் சாடியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்: நாடு முழுவதும் 68-வது குடியரசு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிலையில் 68 வயது ஆளுநர் சண்முகநாதன் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
மேகலாயா ஆளுநராக இருந்த சண்முகநாதன் மீதான பாலியல் புகார்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டோம் வடக்கன் கூறியதாவது:

ராஜ்பவனை 'ரச லீலா' பவனாகி மாற்றினார் சண்முகநாதன். 80-க்கும் மேற்பட்ட ராஜ்பவன் ஊழியர்கள் சண்முகநாதன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
நாடு 68-வது குடியரசு தினத்தை கொண்டாடுகிற நிலையில் 68-வயதாகும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது வெட்கக் கேடானது.
இவ்வாறு டோம் வடக்கன் கூறினார்.












Click it and Unblock the Notifications