வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களை அதிர வைக்கும் நில நடுக்கம்.. பீதியில் மக்கள்!
அஸ்ஸாமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர்: அஸ்ஸாமில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் தற்போது மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் வட மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நில அதிர்வுகளும் நில நடுக்கங்களும் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கவுரிபூர் என்ற இடத்தில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.

மக்கள் தெருக்களில் தஞ்சம்
காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

வீடுகளுக்குள் செல்ல அச்சம்
நிலநடுக்கத்தால் கடும் குளிரிலும் மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சப்பட்டு வீதிகளிலேயே நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் நிலநடுக்கம்
அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பூட்டானிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்நிலையில் தற்போது மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சாலைகளில் குவிந்த மக்கள்
ரிக்டர் அளவில் 4.2 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications