புதிய எம்.எல்.ஏ.க்களை ஆம் ஆத்மி கட்டுப்படுத்துறது கஷ்டமாச்சே.. சொல்வது பிரசாந்த் பூஷண்
டெல்லி: புதிய எம்.எல்.ஏ.க்களை ஆம் ஆத்மி கட்சி கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாகும் என்று ஆம் ஆத்மி கட்சியின் இணை நிறுவனரான பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இதையடுத்து ஆம் ஆத்மியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக கூடி முதல்வராக கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலை தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து அவரும், கட்சியின் மூத்த தலைவர்களும் துணை நிலை ஆளுநர் நஜிப் ஜங்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். புதிய அரசின் பதவி ஏற்பு விழா 14-ந் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை டெல்லியே கொண்டாடியபோது, அக்கட்சியின் இணை நிறுவனரான பிரசாந்த் பூஷண் எந்த ஒரு கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஒதுங்கியே இருந்தார்...
ஆம் ஆத்மி கட்சியில் வேட்பாளர் தேர்வில் தனது ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டதால் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகிக்கொண்டார்.
தற்போது, புதிய எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்துதல் ஆம் ஆத்மிக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அத்துடன் பிற கட்சிகளில் இருந்து கட்சிக்குள் வந்தவர்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது முற்றிலும் முறைகேடானது... தேர்தலில் போட்டியிடுவது அவர்களுக்கு தொழில் போன்றது, ஆனால் இது தொடர்பாக மேலும் எதுவும் தெரிவிக்கப்போவது இல்லை. இப்பிரச்சனையை நான் கட்சிக்குள் எழுப்புவேன் என்றும் கூறியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications