புதிய எம்.எல்.ஏ.க்களை ஆம் ஆத்மி கட்டுப்படுத்துறது கஷ்டமாச்சே.. சொல்வது பிரசாந்த் பூஷண்
டெல்லி: புதிய எம்.எல்.ஏ.க்களை ஆம் ஆத்மி கட்சி கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாகும் என்று ஆம் ஆத்மி கட்சியின் இணை நிறுவனரான பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இதையடுத்து ஆம் ஆத்மியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக கூடி முதல்வராக கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலை தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து அவரும், கட்சியின் மூத்த தலைவர்களும் துணை நிலை ஆளுநர் நஜிப் ஜங்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். புதிய அரசின் பதவி ஏற்பு விழா 14-ந் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை டெல்லியே கொண்டாடியபோது, அக்கட்சியின் இணை நிறுவனரான பிரசாந்த் பூஷண் எந்த ஒரு கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஒதுங்கியே இருந்தார்...
ஆம் ஆத்மி கட்சியில் வேட்பாளர் தேர்வில் தனது ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டதால் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகிக்கொண்டார்.
தற்போது, புதிய எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்துதல் ஆம் ஆத்மிக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அத்துடன் பிற கட்சிகளில் இருந்து கட்சிக்குள் வந்தவர்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது முற்றிலும் முறைகேடானது... தேர்தலில் போட்டியிடுவது அவர்களுக்கு தொழில் போன்றது, ஆனால் இது தொடர்பாக மேலும் எதுவும் தெரிவிக்கப்போவது இல்லை. இப்பிரச்சனையை நான் கட்சிக்குள் எழுப்புவேன் என்றும் கூறியுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications