காஷ்மீரில் தொடரும் என்கவுன்ட்டர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை, போலீஸ்காரர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் போலீசாருக்கும், 2 தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். மேலும் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 4 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் நகரில் கட்டுமானப் பணி நடந்து வரும் கட்டிடம் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Cop Killed In Encounter In Jammu And Kashmir's Poonch; Gunfight On

இதையடுத்து போலீசா்ா அந்த கட்டிடத்திற்கு சென்று அதை சுற்றி வளைத்தனர். கட்டிடத்திற்குள் இருக்கும் 2 தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார் மற்றொருவர் காயம் அடைந்தார். போலீசார், தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருக்கிறது.

துப்பாக்கிச்சூடு நடக்கும் இடம் ராணுவ முகாமுக்கு அருகில் உள்ளது. தீவிரவாதிகளை அழிக்க ராணுவத்தாரும் அங்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 4 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+