திடீர்னு வீடியோ கால்.. "சாப்பாடு தர்றாங்களாப்பா".. இறந்த மகனுடன் பேசிய அம்மா.. கண்ணீர் காட்சிகள்
இறந்த மகனுடன் பேசும் தாயின் கண்ணீர் காட்சிகள் வைரலாகின்றன
அகமதாபாத்: "மகனே, எப்படி இருக்கேப்பா.. உள்ளே நல்லா சாப்பாடு தர்றாங்களா? கவலைப்படாதே.. சீக்கிரமாய் குணமாகிவிடுவே" என்று ஒரு வயதான தாய் ஆஸ்பத்திரிக்கு வெளியே நின்று செல்போனில் பேசுகிறார்.. ஆனால், அவர் யாரிடம் பேசுகிறாரோ, அந்த மகன் எப்போதோ கொரோனாவால் இறந்துவிட்டார்.. இப்படி ஒரு துயரம் சூழ்ந்துள்ளது குஜராத்தில்..!
உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ வைரஸ்கள் நம்மை கவ்வி உள்ளது.. எத்தனையோ பேர் மாண்டு போயுள்ளனர்.. ஆனால், இந்த கொரோனாவை மட்டும் எதுவுமே செய்ய முடியவில்லை..
இது எந்த மாதிரியான வைரஸ் என்பதை கண்டுபிடித்து, ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே இன்னொரு அலை பரவி கொண்டிருக்கிறது. இதனால், உலகமே சிக்கி கொண்டு தவித்து வருகிறது. நம் நாட்டில் மட்டும், இன்றைய நிலவரப்படி 180,550 பேர் இந்த தொற்றால் இறந்திருக்கிறார்கள்.

உயிரிழப்பு
உயிரிழப்புகளால், ஏராளமானோர் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.. வயது வித்தியாசம் பாராமல் தொற்று எண்ணற்றவர்களை கொண்டு போய் கொண்டிருக்கிறது.. இப்படி பலர் மரணித்து வரும் நிலையில், அதன் தாக்கம் அந்த குடும்பத்தாரையும் கடுமையாகவே பாதித்துள்ளது.. அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.

படுக்கை வசதி
அகமதாபாத் நகரில் சிவில் மருத்துவமனை உள்ளது.. இந்த ஆஸ்பத்திரியில்1200 படுக்கை வசதி உள்ளது... இதுபோக நிறைய பேர் அட்மிட் ஆகி உள்ளனர்.. இந்த ஆஸ்பத்திரி வாசலில் பூனம் சோலங்கி என்ற வயதான பெண் நின்று கொண்டே இருக்கிறார்.. அவர் கையில் ஒரு செல்போன் இருக்கிறது. அதில், தன் மகனுக்கு வீடியோ கால் பேசுகிறார்.

கண்ணீர்
"எப்படிப்பா இருக்கே.. உள்ளே நல்ல சாப்பாடு தர்றாங்களா? உனக்கு ஒன்னும் ஆகாது.. சீக்கிரமா குணமாயிடுவே.. கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்" என்று சொல்கிறார்.. இதை மட்டும்தான் சொல்கிறார்.. இதையே திரும்ப திரும்ப சொல்கிறார்.. காரணம், அந்த மகன் எப்போதோ இறந்துவிட்டார்.. இவரது மகன் அந்த ஆஸ்பத்திரியில் தான் கொரோனா ட்ரீட்மென்ட்டில் இருந்துள்ளார்.. ஒரு வாரம் சிகிச்சையும் தந்துள்ளனர்.. ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.. மகன் இறந்துவிட்டது அந்த அம்மாவுக்கு தெரியும்... ஆனாலும், அவர் இறந்ததை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

வீடியோ கால்
திடீர் திடீரென ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்று கொள்கிறார். உடனே வீடியோ கால் பேசுகிறார்.. அதாவது கடைசியாக மகனிடம் என்ன சொன்னாரோ, அதையேதான் திரும்ப திரும்ப சொல்கிறார்.. குடும்பத்தினர் யாராலும் இவரை தேற்ற முடியவில்லை.. இவர் மட்டுமில்லை.. 18 வயது பெண் ஒருவரும் இதேபோல ஆஸ்பத்திரிக்கு வந்து அப்பா எப்படி இருக்கிறார் என்று கேட்டு கொண்டே இருக்கிறார்..

நம்பிக்கை
ஆனால், இவர் அப்பா இறந்து ஒரு மாசம் ஆகிறது.. அப்பாவுக்கு இறுதிச்சடங்கு செய்தவரும் இந்த பெண்தான்.. ஆனாலும், அப்பா இறந்ததாக அவரால் ஏற்கவே முடியவில்லை.. அதாவது மன ரீதியாக இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தனக்கு மிகவும் பிடித்தவர், இறக்க மாட்டார்கள், எப்போது வேண்டுமானாலும் தங்களிடம் திரும்பி வந்துவிடுவார்கள் என்று இவர்கள் ஆழமாக நம்புகிறார்களாம்..

தொற்று
இதில் ஒரு கொடுமை என்னவென்றால், ஒருவர் இறந்துவிட்டால், அவர்களின் முகத்தை கடைசியாக குடும்பத்தினர் பார்த்து கொள்வது வழக்கம்.. ஆனால், இந்த பாழாய் போன கொரோனாவால் அந்த குடுப்பினை கூட இல்லை.. தொற்று காரணமாக இறந்துவிட்டால், முகத்தை பார்க்க பல சமயங்களில் அனுமதியும் கிடைப்பதில்லை.. இதுவும் மன ரீதியாக இவர்களுக்கு பாதிப்பை தருகிறது. இப்படி இறந்து போனவர்களை நினைத்து பல இதயங்கள் தவியாய் தவித்து கொண்டிருக்கின்றன, ஒரு தெளிவும் அறியாமல்... ஒரு முடிவும் அறியாமல்...!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications